'எச்சரித்தும் கேட்காமல்'... 'மாற்றி, மாற்றி கூறி'... 'தற்போது புதிய கணிப்பை வெளியிட்டு அதிர வைத்த ட்ரம்ப்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | May 04, 2020 04:41 PM

கொரோனா தாக்கத்தில் உயிரிழப்பு குறித்து மாற்றி மாற்றிக் கூறிய ட்ரம்ப், தற்போது ஒரு லட்சம் பேர் வரை உயிரிழக்கக்கூடும் என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

I Used to Say 65,000 Deaths But now, it could reach 1,00,000

கொரோனா வைரஸ் பாதிப்பால், அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாகாணங்களில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், அங்கு, நேற்று முன்தினம் மட்டும், 34 ஆயிரம் பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதியானது. ஒரு நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு இது. இதையும் சேர்த்து, அமெரிக்காவில் வைரஸ் தொற்று உள்ளோர் எண்ணிக்கை, 11 லட்சத்து, 67 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மேலும், ஒரே நாளில், 1,947 பேர் உயிரிழந்து, பலி எண்ணிக்கை, 67 ஆயிரத்தை கடந்துள்ளது.

'இந்த வைரசால், 1 முதல் 2.2 லட்சம் பேர் உயிரிழப்பர்' என, வெள்ளை மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு குழு எச்சரித்திருந்தது. ஆனால், அதிபர் டிரம்ப், பலமுறை, தன் கணிப்பை மாற்றி வந்துள்ளார். முதலில், 60 ஆயிரம் பேர் உயிரிழப்பர் என்று கூறிய அவர், பின், 70 ஆயிரம் என, தன் கணிப்பை உயர்த்தினார். தற்போது, ஒரு லட்சம் பேர் உயிரிழக்கக் கூடும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ட்ரம்ப் கூறியதாவது, ‘கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால், நம் நாட்டில், 2.2 லட்சம் பேர் இறப்பர் எனக் கூறினர். ஆனால், நம் அரசு எடுத்த கடும் நடவடிக்கைகளால், லட்சக்கணக்கானோர் உயிரைக் காப்பாற்றியுள்ளோம். அதிகபட்சம், ஒரு லட்சம் பேர் உயிரிழப்பர் என, நினைக்கிறேன். எனினும் கொரோனாவால் நாட்டை எப்போதும் முடக்கியே வைத்திருக்க முடியாது. இந்த ஆண்டின் இறுதியில் கொரோனா வைரசுக்கு மருந்து கிடைத்துவிடும்’ என்று கூறியுள்ளார்.