‘அனுமதியளித்த ஒரே வாரத்தில்’... ‘இத்தனை லட்சம் பேருக்கு’... ‘கொரோனா தடுப்பூசி செலுத்தி அதிரடி காட்டும் நாடு’...!!!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் லட்சக்கணக்கானோருக்கு ஒரு வாரத்தில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
![138,000 people in UK receive Covid vaccine in first week 138,000 people in UK receive Covid vaccine in first week](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/138000-people-in-uk-receive-covid-vaccine-in-first-week.jpg)
அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுதது இந்த கொரோனா தடுப்பூசியை இங்கிலாந்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஃபைசர் நிறுவனம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது. அந்த விண்ணப்பத்தையடுத்து இங்கிலாந்தில் ஃபைசர் தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அந்நாட்டு அரசு அனுமதியளித்தது.
இதையடுத்து, இங்கிலாந்து முழுவதும் கடந்த 8 ஆம் தேதி ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. முதல்கட்டமாக கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவ ஊழியர்களுக்கு, வயதானோருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 8-ம் தேதி தடுப்பூசி போடும்பணி தொடங்கப்பட்ட நிலையில் முதல் வாரத்தில் எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற தகவலை இங்கிலாந்து சுகாதாரத்துறை வெளியிட்டது.
அந்த தகவலின்படி இங்கிலாந்தில் டிசம்பர் 8-ம் தேதி முதல் டிசம்பர் 16 வரை 7 நாட்களில் மொத்தம் 1 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசியின் முதல் டோஸ் தற்போது போடப்பட்டுள்ளவர்கள், தடுப்பூசியின் 2-வது டோஸ்-ஐ 21 நாட்களுக்கு பின்னர் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)