பிரசவ வலியில் 'கதறித்துடித்த' பெண்... இறுதியில் நேர்ந்த... நெஞ்சை 'உறைய' வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | May 04, 2020 11:24 PM

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையேயுள்ள நடராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் தெய்வேந்திரன். இவர் ரஞ்சனி என்பவரை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது மீண்டும் ரஞ்சனி நிறைமாத கர்ப்பிணியாகவுள்ளார்.

Women who gave birth to a child died due to alone

இரண்டு தினங்களுக்கு முன் தெய்வேந்திரன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த ரஞ்சனிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த குழந்தை பிறக்கும் போதே குழந்தை இறந்து விட்டதால் அந்த குழந்தையை ஒரு துணியில் சுற்றி வைத்துள்ளார். இதனால் அவரது ரத்தப்போக்கு அதிகமான நிலையில் அவர் சோர்ந்து போயுள்ளார்.

இந்த தகவலை அறிந்த ரஞ்சனியின் மாமனார் வீட்டின் அருகிலுள்ள நபரின் உதவியுடன் 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு ரஞ்சனியை கொண்டு சென்ற நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடலைக் கைப்பற்றினர்.

தனியாக இருந்த கர்ப்பிணிப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.