ஏம்மா அழுதுட்டு இருக்க.. கண்ணீருடன் மனைவி சொன்ன விஷயத்தைக் கேட்டு ஆடிப்போன கணவன்.. அதிர்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 03, 2022 05:42 PM

நண்பன் மனைவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman sexual abuse by husband friends in Tiruvannamalai

உக்ரைன் விவகாரம் எதிரொலி.. ரஷ்ய அமைச்சர் பேச ஆரம்பிச்சதும் நடந்த சம்பவம்.. ஐநா சபையில் நடந்த ஷாக்..!

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் புதுகாமூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன்-ரேவதி தம்பதியினர். இந்த தம்பதிக்கு ஷாலினி (வயது 10) என்ற மகளும் ராகுல் (வயது 8)  என்ற மகனும் உள்ளனர். மணிகண்டன் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார்.

நண்பன்

மணிகண்டனுக்கு கோகுல்ராஜ் என்ற நண்பன் உள்ளார். இவர் பெங்களுரைச் சேர்ந்த ஜீவிதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொள்வதாக கூறி அப்பெண்ணை ஆரணிக்கு அழைத்து வந்து மணிகண்டனின் வீட்டின் அருகில் தங்க வைத்து குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

வெளியூர் சென்ற கணவன்

இந்த நிலையில் மணிகண்டன் 2 நாட்களுக்கு முன்பு வெளியூருக்கு வேலை விஷயமாக சென்றுள்ளார். அதனால் மனைவி ரேவதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது கோகுல்ராஜ், மற்றொரு நண்பன் ஜெயசூர்யா ஆகிய இருவரும் மதுபோதையில் நண்பன் மணிகண்டனின் மனைவி ரேவதி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து வீட்டிற்குள் சென்றுள்ளனர். அப்போது ரேவதியை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டியுள்ளனர்.

Woman sexual abuse by husband friends in Tiruvannamalai

பாலியல் பலாத்காரம்

இதனை வேலை முடிந்து மணிகண்டன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அழுதுகொண்டிருந்த மனைவியிடம் என்ன நடந்தது என விசாரித்துள்ளார். அப்போது அழுதுகொண்டே ரேவதி கூறியதைக் கேட்டு மணிகண்டன் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக தனது மனைவியை அழைத்துக்கொண்டு ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோகுல்ராஜ் மற்றும் ஜெயசூர்யா கூட்டாக சேர்ந்து ரேவதியை பாலியல் வன்கொடுமை செய்து அதனை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டியது தெரியவந்தது.

கைது

இதனையடுத்து 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வீட்டில் தனியாக இருந்த நண்பன் மனைவியை இருவர் பாலியல் பலாத்காரம் செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சண்டை ஒரு பக்கம் நடந்திட்டு இருக்கு.. சைலண்டா ரஷ்யா போடும் மாஸ்டர் ப்ளான்?.. இது யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!

Tags : #WOMAN #HUSBAND FRIENDS #TIRUVANNAMALAI #நண்பன் #மனைவி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman sexual abuse by husband friends in Tiruvannamalai | Tamil Nadu News.