'அடுத்த முறை 1 மணி நேரம் பேசுவேன்'.. அடைமழை போல் கைத்தட்டிய மக்கள்.. உருகிய விஜயகாந்த்.. நெகிழ்ந்த தொண்டர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 16, 2019 10:22 AM

நடிகர் விஜயகாந்த் நடிகராக இருந்து, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை தொடங்கிய பிறகும் அவர் சில காலங்கள் நடிப்பதைத் தொடர்ந்தார். 

will talk for one hour in next Speech, Says Vikaykanth

கட்சி தொடங்கிய போது, அவருடைய பேச்சைக் கேட்டு ஆரவராத்துடன் கை தட்டிய ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் இடையில் சில காலம் விஜயகாந்த் சரிவர பேசவியலாது போனது தாங்க முடியா வண்ணமே இருந்தது எனலாம். 

எனினும் அவ்வப்போது சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு சென்றுவந்த விஜயகாந்த், தற்போது திருப்பூர் கட்சிக் கூட்டத்தில், பேசிய வீடியோ பரபரப்பாகி வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், அனைவரையும் சகோதர சகோதரிகளே என்றழைத்துப் பேசினார்.

ஒருநாள் ஒருபொழுதாவது விஜய்காந்திற்கு விடியும்; அப்பொழுது தொண்டர்களை, தங்க தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன் என்று பேசிய விஜயகாந்த், அடுத்த முறை பேசினால், 1 மணி நேரம் தொடர்ச்சியாக பேசுவேன் என்று கூறினார். இதைக் கேட்டதும் கூடியிருந்தவர்கள் நெகிழ்ச்சிப் பெருக்கில் நீண்ட நேரம் கைத்தட்டினர். 

Tags : #VIJAYKANTH #DMDK