போன் பேசிக்கொண்டே மின்கம்பத்தில் சாய்ந்தவரை தாக்கிய மின்சாரம்.. பதறவைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Nov 25, 2022 09:48 PM

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே மின்சார கம்பத்தில் சாய்ந்துகொண்டு போன் பேசிய இளைஞரை மின்சாரம் தாக்கியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

Tragedy happened to youth who talking in phone while leaning on pole

Also Read | ஆண் நண்பருடன் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. வீட்டுக்கு திரும்பிய அம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கருவாளூர் மேலத்தெருவை சேர்ந்தவர் விஜய குமார். 23 வயதான இவர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள தறிப் பட்டறையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆறு மாதங்களாக விஜய குமார் இங்கே பணிசெய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் தான் தங்கியிருந்த பகுதியில் உள்ள மின்சார கம்பத்தில் சாய்ந்துகொண்டு போன் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார் விஜய குமார். அப்போது, மின் கம்பத்தில் இருந்து கீழே கொடுக்கப்பட்டிருந்த எர்த் கம்பியை விஜய குமார் தொட்டிருக்கிறார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்திருக்கிறது. இதனால் அவர் அலறித் துடிக்கவே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்திருக்கின்றனர். மின்சாரம் தாக்கப்பட்ட விஜய குமாரை கவனமாக மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை ஆம்புலன்ஸ் மூலமாக  ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

Tragedy happened to youth who talking in phone while leaning on pole

50 சதவீத தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட விஜய குமாருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்தில் விஜய குமாரின் கை, மார்பு, முதுகு ஆகிய பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

செல்போன் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும் எனவும் மழைக் காலங்களில் மின் கம்பங்கள் அருகே செல்ல வேண்டாம் எனவும் அவற்றின் அருகே நின்று போன் பேச வேண்டாம் எனவும் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் இப்படியான சம்பவங்களும் தொடர்ந்து நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்திருக்கின்றனர்.

Also Read | கனவுல தொல்லை கொடுத்து வந்த பாம்பு.. பரிகாரம் பண்ண போனவரின் நாக்குலயே கொத்திய பரபரப்பு சம்பவம்..

Tags : #YOUTH #PHONE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tragedy happened to youth who talking in phone while leaning on pole | Tamil Nadu News.