“கன்னித்தீவு எங்க? கன்னிகளை வெச்சே தீவு அமைச்ச நித்தி எங்க?”.. “NO சூடு.. NO சுரணை!”..திருமண வீட்டில் ‘வைரல்’ பேனர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Aug 30, 2020 11:32 AM

திருச்சி மாவட்டத்தில் திருமண வீட்டில் நித்யானந்தாவை புகழ்ந்து வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் பரபரப்பாகியதை அடுத்து அதனை போலீஸார் அகற்றியுள்ளனர்.

TN Youngster erect banner for Nithyananda for Marriage function

மணப்பாறை அருகே நடந்த திருமண விழாவில் நித்யானந்தாவின் படத்தை போட்டு ஒரு பக்கம் மணமக்களின் புகைப்படம் மற்றும் விபரங்களை பதிவிட்டு, வாழ்த்து பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில், “பல வருடமா கன்னித்தீவை தேடி அலைகிற சிந்துபாத் எங்க? கன்னிகளை வைத்தே தீவு ரெடி பண்ணின நம்ம நித்தியானந்தா எங்க” என்று எழுதப்பட்டிருந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், மணமக்களை நித்யானந்தா வாழ்த்துவது போல், இருக்கும் புகைப்படத்தின் அருகே, “நோ சூடு.. நோ சுரனை” என்கிற வாசகமும் இடம் பெற்றுள்ளது.  அதன் கீழே மணமக்களை வாழ்த்தும் நண்பர்களின் புகைப்படங்கள் இருந்துள்ளன. அதற்கு கீழே கைலாசம் செல்ல இருப்பவர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. TN Youngster erect banner for Nithyananda for Marriage function | Tamil Nadu News.