'பக்காவா ப்ளான் பண்ணி உள்ளே நுழைந்து...' 'தனியாக இருந்த மூதாட்டியை...' 5000 ரூபாய்க்காக நடந்த அதிர்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 28, 2020 11:58 AM

சேலம் அருகே ரூ.5000 பணத்திற்காக மூதாட்டியின் கழுத்தை குத்திக் கொலை செய்ததாக போதைப் பழக்கத்திற்கு அடிமையான 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The boys killed their grandmother and stole 5000 rupees

சேலம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் பழனியம்மாள் என்ற மூதாட்டி மாலையில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலையில் அந்த மூதாட்டி தனியாக இருப்பதை தெரிந்துக்கொண்டு அந்தப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் இருவர் மூதாட்டியின் வீட்டுக்குள் வந்துள்ளனர்.

அப்போது தனியாக இருந்த மூதாட்டியை கழுத்தை அந்த சிறுவர்களில் ஒருவன் குத்திக் கொலை  செய்திருக்கிறார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் ரூ.5,000 பணத்தை பறித்து சிறுவர்கள் இருவரும் தப்பி ஓடினர். ரத்த வெள்ளத்தில் மூதாட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த சிறுவர்கள் தான் மூதாட்டியை கொலை செய்தது தெரிய வந்தது.

உடனே, 17 வயது சிறுவனையும் அவனது நண்பனான மற்றொரு சிறுவனையும் போலீஸ் கைது செய்தது. போதைப் பழக்கத்திற்கு அடிமையான இருவரையும் தனிப்படை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Tags : #GRANDMOTHER