'அம்மா, அப்பா வீட்டுல இல்லாத நேரம் பார்த்து...' வீடியோவைக் காட்டி மிரட்டி... ஓராண்டாக நடந்தேறிய கொடூரம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 28, 2020 11:56 AM

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காதல் ஆசைக்காட்டி பள்ளிச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பட்டதாரி இளைஞர் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Teenage student sexually abused for a year ...

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் பட்டதாரி சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும் அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி கடந்த ஓராண்டில் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார். பின்னர் இந்த வீடியோவை அக்களூர் கண்ணன் என்பவருக்கும் பகிர்ந்திருக்கிறார். இதனை அடுத்து வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து சிறுமியின் வீட்டிற்கு வந்த கண்ணன், சிறுமியை மிரட்டி அத்துமீற முயன்றுள்ளார். அப்போது பெற்றோர் வீட்டிற்குள் வந்து விடவே கண்ணன் தப்பி ஓடியுள்ளார்.

முழு விபரம் அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சைல்ட் ஹெல்ப் லைனில் புகார் அளித்ததை அடுத்து, போக்சோ சட்டத்தில் கண்ணன் மற்றும் சந்தோஷை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags : #HARASSMENT