‘மத்த கதையெல்லாம் எதுக்கு?’.. குடிமகன்களை ‘நடுங்க வைக்கும்’ டாஸ்மாக் ‘விற்பனை நேரம்’ பற்றிய முக்கிய அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 01, 2020 11:08 AM

தமிழகம் முழுவதும் செயல்பட்டுவந்த 5,300 டாஸ்மாக் கடைகள் கொரோனா பரவலின் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25-ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மூடப்பட்டன.

Tamilnadu Tasmac important announcement over timing

ஆனால் ஊரடங்கு அமலில் இருந்தபோது, மே 7-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளின்படி சென்னையின் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளிலுள்ள 3,700 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. பின்னர் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் சென்னையிலும் டாஸ்மாக் கடைகள் செயல்பட தொடங்கின.

இதனை அடுத்து சென்னையில் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் டாஸ்மாக் செயல்பட்டுவந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதுமுள்ள டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள், இன்று முதல் நண்பல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tamilnadu Tasmac important announcement over timing | Tamil Nadu News.