'திருமணம் ஆகி ஒரே நாளில் சோகம்!'.. 'மனைவி' சொன்னதை நம்பி வீட்டுக்கு வெளியே சென்ற 'கணவர்'!.. அடுத்த நொடியே 'புதுப்பெண்' எடுத்த 'விபரீத' முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 02, 2020 09:51 AM

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அழகாபுரி நகரில், தச்சு வேலை செய்துவரும் 27 வயதான செல்வக்குமாருக்கும் விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த சீனிவாசன்  என்பவரின் 20 வயது மகள் சுவேதாவுக்கும் எற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று முன்தினம் மானாமதுரையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்து முடிந்தது.

sivakasi girl commits suicide on next day of marriage

திருமணம் முடிந்த கையோடு புதுவீட்டில் புதுமண தம்பதிகளாக குடியேறிய நிலையில், புதுப்பெண் தன் கணவரிடம் அருகில் உள்ள பழைய வீட்டில் தனது செல்போன் இருப்பதாகவும் அதை எடுத்து வரும்படியும் கேட்டுள்ளார். மனைவி சொன்னதை நம்பி பழைய வீட்டுக்கு செல்போனை எடுக்க செல்வகுமார் சென்றபோது புதுப்பெண் சுவேதா, புதுவீட்டின் கதவை அடைத்திருக்கிறார். இதைக் கண்டதும் செல்வக்குமார் அதிர்ந்துபோயுள்ளார். ஓடிவந்து கதவைத் திறக்கும்படி கத்தியுள்ளார்.

ஆனால் சுவேதா கதவையே திறக்காததையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் செல்வக்குமார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் மின்விசிறியில் புடவை கொண்டு சுவேதா தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தது தெரியவர, உடனே அவரை மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

திருமணமான 2-வது நாளில் மணப்பெண் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியை பரபரப்பில் ஆழ்த்தியதை அடுத்து சிவகங்கை கோட்டாட்சியர் முத்துகழுவன் மேல்விசாரணை நடத்தி வருவதுடன், போலீஸாரும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sivakasi girl commits suicide on next day of marriage | Tamil Nadu News.