உன்ன மலை போல நம்பினோமே...! 'கடைசியில நீயும் அவங்கள போல பண்ணிட்டியே...' - ஃபங்க்ஷன் நடக்கிறப்போவே பூச்சி மருந்து தின்ற அப்பா...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Aug 31, 2020 03:03 PM

தன் மூன்று மகள்களும் காதல் திருமணம் செய்துகொண்டதால், தென்காசியை சேர்ந்த தந்தை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tenkasi father sucide three daughters married for love

64 வயதான மாயாண்டி என்னும் நபர், தென்காசி மாவட்டம் புளியங்குடி பேச்சி அம்மன் தெருவில் வசித்து வருகிறார். மரம் ஏறும் தொழில் செய்து வரும் மாயாண்டி அவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

3 பெண் பிள்ளைகளில், 2 மகள்கள் ஏற்கனவே காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனால் மாயாண்டி மற்றும் அவரின் மனைவிக்கு மனவருத்தம் இருந்ததுள்ளது. ஆனால் அதை பெரிதும் வெளிக்காட்டாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில் அவரின்  மூன்றாவது மகளை தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து வைக்கலாம் என நம்பியுள்ளனர். ஆனால்  மூன்றாவது மகளும் உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். உறவினர் என்றாலும் காதல் என்பதால் மாயாண்டி அத்திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக மாயாண்டி அவர்களின் இளைய மகள் கடந்த 28-ந் தேதி தன் காதலருடன் வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான 64 வயதான மாயாண்டி மனமுடைந்த திருமணம் நடந்த மதியம் அன்றே பூச்சி மருந்து அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

வீட்டில் இருந்த உறவினர்கள் மாயாண்டியை உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிறிது நேரம் கழித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மகள்களின் நடவடிக்கையால் தந்தை செய்த இந்த காரியம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tenkasi father sucide three daughters married for love | Tamil Nadu News.