'என்ன ஆபாச படம் பாக்க சொல்றாரு'... 'கதறிய 19 வயது மாணவி'... 'பதறாம யாருன்னு சொல்லுமா'... பதிலை கேட்டு ஆடிப்போன போலீசார்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jul 13, 2020 04:59 PM

தன்னை ஆபாசப் படம் பார்க்கச் சொல்லி வற்புறுத்துவதாக மாணவி ஒருவர் காவல்நிலையத்தில் கதறிய நிலையில் புகார் தெரிவித்தார். யார் பார்க்கச் சொன்னார் என்பதைக் கேட்ட போலீசார் ஆடிப் போனார்கள்.

Pondicherry : Father forcing his Daughter to wacth Pon

புதுச்சேரியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவரது தந்தை ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். போதைப் பொருட்களுக்கு அடிமையான இவர், தனது செல்போனில் ஆபாசப் படங்களைப் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதை அவரது மனைவி கவனித்த நிலையில் கணவர் சரி ஆகிவிடுவார் என்று நினைத்து விட்டுள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் 19 வயது மகள் மற்றும் மனைவி ஆகியோர் இருக்கும்போதே ஆபாசப் படம் பார்த்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன அவரது மனைவி, பெற்ற மகள் இருக்கும் போது ஒரு தந்தை செய்யும் காரியமா இது எனக் கண்டித்துள்ளார். ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாத அவர், தனது போக்கிலேயே இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் மகளிடமே ஆபாசப் படங்களைப் பார்க்குமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும் ஆபாசப் படங்களில் வருவது போன்று நடந்து கொள்ளுமாறு மனைவியிடம்  பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை எல்லாம் மிஞ்சி, மனைவி மற்றும் மகள் இருக்கும் போது குளித்து விட்டு வந்த அவர், இருவர் முன்பு நிர்வாணமாக நின்று கொண்டு துணிகளை மாற்றியுள்ளார்.

என்ன செய்வது எனத் தெரியாமல் இருவரும் தவித்து வந்த நிலையில், கடந்த மாதம் 28-ந் தேதி வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது மகளின் அருகில் சென்று படுத்துக் கொண்டு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சலிட்டார். சத்தம்கேட்டு அங்குத் தூங்கிக்கொண்டிருந்த அவரது மனைவி கண்விழித்து கணவரிடம் சண்டை போட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், தனது மனைவியைத் தாக்கியுள்ளார். தட்டிக் கேட்ட மகளையும் அடித்துள்ளார். இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காகக் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இதுதொடர்பாக அந்த மாணவி போலீசாரிடம் நடந்த கொடுமைகளைக் கூறி அழுதுள்ளார். மாணவி சொன்ன தகவல்களைக் கேட்டு போலீசாரே ஆடிப் போனார்கள். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த நபரைத் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Pondicherry : Father forcing his Daughter to wacth Pon | Tamil Nadu News.