'தனக்கு என்ன நடக்குதுன்னே தெரியாத பொண்ணு'... 'அப்பாவும், மகனும் மாத்தி மாத்தி'... ஈரக்கொலையை நடுங்க வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jun 25, 2020 11:07 AM

சமூகத்தில் நடக்கும் சில சம்பவங்களை நாம் அப்படியே கடந்து சென்று விட முடியாது. அது போன்ற சம்பவங்களைச் செய்பவர்கள் உண்மையிலே மனிதர்கள் தானே என்ற எண்ணம் பலருக்கும் தோன்றி இருக்கும். அதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

Ariyalur : Father and son sexually abused a mentally challenged girl

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். 45 வயதான இவருக்குத் திருமணமாகி, 22 வயதில் கார்த்திக் என்ற மகன் உள்ளார்.இவர்களது வீட்டிற்கு அருகே மனவளர்ச்சி குன்றிய பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். அந்த பெண்ணை தங்களது வக்கிர கண்ணோடு நோட்டமிட்ட தந்தையும், மகனும், தக்க நேரம் பார்த்து அந்த பரிதாப பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள்.

தனக்கு என்ன நடக்கிறது என்பதைக் கூட அறியாத அந்த பெண்ணை, தந்தையும், மகனும் மாறி, மாறி வன்கொடுமை செய்துள்ளார்கள். இதனால் அவருக்கு உடல் நலம் குறைவு ஏற்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த பெண் தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

இதையடுத்து அந்த பெண்ணின் அண்ணன் கொடுத்த புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்துறை வழக்குப்பதிந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குமார் மற்றும் கார்த்திக் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே தந்தை மகன் இருவரையும் திருச்சி மண்டல டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி சிறையிலிருந்த தந்தை- மகன் இருவரிடமும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையின் நகலை போலீசார் வழங்கினர். ஒன்றும் அறியாத மனவளர்ச்சி குன்றிய பெண்ணை தந்தையும், மகனும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ariyalur : Father and son sexually abused a mentally challenged girl | Tamil Nadu News.