கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி.. புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுச்சேரி கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
![Permission to celebrate New year at Pondicherry beach Permission to celebrate New year at Pondicherry beach](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/permission-to-celebrate-new-year-at-pondicherry-beach.jpg)
கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்து தமிழக அரசு நேற்று அறிவிப்பை வெளியிட்டது. மேலும் தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உணவகம் மட்டும் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள அனைத்து கடற்கரைகளில் கிறிஸ்துமஸ் இரவு நேர வழிபாட்டிற்கும், புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மேலும் விடுதிகளில் 200 நபர்களுக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)