'வர ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை'... 'கவலப்படாதீங்க தங்கம் வாங்க வழி இருக்கு'... நகைக்கடைகளின் அதிரடி ஐடியா!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு காரணமாக நகைக் கடைகள் மூடி இருந்தாலும் அட்சய திருதியை நாளில், தங்கம் வாங்கலாம் என முன்னணி நகை கடைகள் அறிவித்துள்ளன.
![People can buy gold online this Akshaya Tritiya amid lockdown People can buy gold online this Akshaya Tritiya amid lockdown](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/people-can-buy-gold-online-this-akshaya-tritiya-amid-lockdown.jpg)
சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வருகிற 3-வது திதியை, ‘அட்சய திருதியை’ என்று குறிப்பிடுவார்கள். அந்த அட்சய திருதியை வருகிற 26.4.2020 (ஞாயிற்றுக்கிழமை) வருகின்றது. அன்றைய தினத்தில் சிறிய அளவிலாவது தங்கம் உள்பட மங்கல பொருட்களை வாங்குவது நல்லது மற்றும் தங்கம் மேலும் அபிவிருத்தியாக வழிவகுக்கும் என்பது மக்களின் நம்பிக்கை ஆகும். ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.
மேலும் அத்தியாவசிய கடைகளை தவிர நகைக்கடைகள் உள்பட பல்வேறு வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் அட்சய திருதியை அன்று ''ஆன்லைன் மூலம் தங்கம் வாங்கும் வசதியை பெரும்பாலான நகைக் கடைகள் அறிவித்துள்ளன''. இதையொட்டி பல நகைக்கடைகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் இதற்கான அறிவிப்பை அனுப்பியுள்ளன.
சென்னையின் முன்னணி நகைக் கடை ஒன்று தனது வாடிக்கையாளருக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், ''வருகின்ற அட்சய திருதியை உங்களுக்கு வளமான எதிர்காலத்தை அளிக்க வாழ்த்துகிறோம். எங்கள் நகைக்கடையில் ஆன்லைன் மூலம் நீங்கள் பரிசுக் கூப்பன்களை வாங்கலாம். லாக் டவுன் முடிந்த பின்னர் இந்த பரிசுக்கூப்பனை பயன்படுத்தி தங்க நகைகள், தங்க காசுகள் வாங்கலாம். இதற்கு வாட் வரியில் இருந்து சலுகையும், பிற கவர்ச்சிகரமான பரிசுகளும் உண்டு”. இவ்வாறு அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனியையே அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க பல வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாக நகை கடை உரிமையாளர்கள் கூறியுள்ளார்கள்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)