COMPLAINT கொடுத்த பெண்ணையே கரம்பிடித்த வாலிபர்.. சிறைக்கு வெளியே டும்..டும்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Sep 02, 2022 11:42 AM

மதுரையில் தன்மீது காவல்துறையில் புகார் கொடுத்திருந்த பெண்ணையே திருமணம் செய்திருக்கிறார் இளைஞர் ஒருவர். இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Madurai Man marries woman who files complaint against him

Also Read | இது புதுசால்ல இருக்கு.. விநாயகருக்கு ஆதார் கார்டு வடிவில் சிலை.. பிறந்த தேதிலாம் இருக்கா..?

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மணப்பட்டியை சேர்ந்தவர் ரம்யா. இவரும் பக்கத்து ஊரான கோட்டைப்பட்டியை சேர்ந்த அழகு ராஜா என்பவரும் நண்பர்களாக பழகி வந்தனர். நாளடைவில் இது காதலாக மாறியிருக்கிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ரம்யா தனது காதலர் அழகு ராஜாவிடம் கூறிவந்திருக்கிறார். இருப்பினும் அதுகுறித்த நடவடிக்கைகளை அவர் எடுக்காததால் கடந்த 2019 ஆம் ஆண்டு அழகு ராஜாவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார் ரம்யா.

Madurai Man marries woman who files complaint against him

போலீசில் புகார்

அப்போது, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அவர் கேட்டிருக்கிறார். இதனையடுத்து தன்னை தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் அந்தப் பெண். இதனையடுத்து காவல் துறையினர் அழகு ராஜாவை கைது செய்தனர். அதன்பிறகு பிணையில் வெளியே வந்த அவர் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றிருக்கிறார். இதனையடுத்து லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர் கொட்டாம்பட்டி காவல் துறையினர். அதன்மூலம், விமான நிலையங்களில் பரிசோதனை நடைபெற்று வந்தது. அழகு ராஜா மீண்டும் விமான பயணம் மேற்கொண்டால் கொட்டாம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்பதால் அழகுராஜாவை கைது செய்ய காத்திருந்தனர் போலீசார்.

Madurai Man marries woman who files complaint against him

திருமணம்

இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்னர் அழகு ராஜா சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊர் திரும்பியிருக்கிறார். இதனை அறிந்த கொட்டாம்பட்டி காவல் துறையினர் அவரை கைது செய்து மேலூரில் உள்ள கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையில் இருந்து மீண்டும் பிணையில் வெளிவந்த அழகுராஜா, சிறைக்கு வெளியே இருந்த காளியம்மமன் கோவிலில் வைத்து ரம்யாவை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் மணமகள் ரம்யாவின் வீட்டை சேர்ந்தவர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். இருப்பினும் அழகு ராஜாவின் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை எனத் தெரிகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

Also Read | Video : விமானத்தில் ஏறிய சிறுவன்.. மறுகணமே கட்டியணைத்து கொண்ட விமான பணிப்பெண்.. சுவாரஸ்ய பின்னணி!!

Tags : #MADURAI #MADURAI MAN MARRIES WOMAN #COMPLAINT #MARRIED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Madurai Man marries woman who files complaint against him | Tamil Nadu News.