'பைக்'கை தள்ளிக் கொண்டே வந்த 'இளைஞர்'... கூப்ட்டு வெச்சு 'போலீஸ்' விசாரிச்சதுல... தெரிய வந்த 'ஷாக்'... எப்படி வந்து சிக்கிருக்கான் 'பாருங்க'??!!!..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Nov 26, 2020 06:42 PM

கோவை மாவட்டம் பிள்ளையார்புரம் பகுதியில் போலீசார் சில தினங்களுக்கு முன் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது நள்ளிரவில் இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு வந்துள்ளார். சந்தேகத்தின் பெயரில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

kovai youth robbed chain and lost petrol while escape caught

விசாரணையில் அந்த இளைஞர் சொன்ன தகவல்கள் அனைத்தும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார், அவரிடம் விசாரணையை தொடர்ந்தனர்.

அப்போது தான் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் என்றும், கோவையில் கிடைக்கும் வேலையை செய்து வந்ததாகவும் கூறியுள்ளார். பிடிபட்ட இளைஞரின் மீது, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அது மட்டுமில்லாமல், போலீசாரிடம் சிக்கிய தினத்தன்று, அப்பகுதியிலுள்ள வீடு ஒன்றில் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து சங்கிலியை பறித்து வந்துள்ளார். அப்போது பைக்கில் பெட்ரோல் காலியாகி விட, அதனை தள்ளிக் கொண்டே வந்த போது தான் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

பைக்கை தள்ளிக் கொண்டு வந்த போது, அந்த இளைஞருடன் வேறு ஒருவரும் இருந்துள்ளார். போலீசாரைக் கண்டதும் அந்த நபர் தப்பித்து ஓடியுள்ளதாக தெரிகிறது. மேலும், அந்த இளைஞர் திருடிய நகை கவரிங் என்பதும் தெரிய வந்துள்ளது. கைது செய்த இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #KOVAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kovai youth robbed chain and lost petrol while escape caught | Tamil Nadu News.