'ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகள்'... 'அனைத்தும் வாபஸ்'... முதல்வர் அதிரடி அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Feb 05, 2021 05:56 PM

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது, பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

jallikattu protest withdraws says tn cm edappadi palaniswami

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதில் உரையில் முதல்வர் பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். காவலர்களை தாக்கியது, வாகனங்களுக்கு தீ வைத்தது தவிர பிற வழக்குகள் சட்ட வல்லுனர்களின் ஆலோசனை பெற்று திரும்ப பெறப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில், இன்றைய தினம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதில் உரையில், பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி கோரி, சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பல நாட்கள் போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடித்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Jallikattu protest withdraws says tn cm edappadi palaniswami | Tamil Nadu News.