திடீரென மனைவி இறந்துவிட்டதாக சொன்ன கணவன்.. போலீஸ் விசாரணையில் தெரியவந்த உண்மை.. அதிர்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 29, 2022 01:53 PM

தேனி அருகே மர்மமான முறையில் மனைவி உயிரிழந்த வழக்கில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Husband arrested by police in his wife death case

Also Read | இந்த வெயிலை சமாளிக்க இதுதான் ஒரே வழி.. வேறலெவலில் யோசிச்ச கல்யாண வீடு.. சிறப்பான சம்பவம்..!

தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த அழகர்சாமி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 40). பெயிண்டரான இவருக்கு விருதுநகர் மாவட்டம் ஆவாரங்குளம் பகுதியைச் சேர்ந்த பிரபாவுடன் (வயது 34) திருமணமாகியுள்ளது. இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். பிரபா, சின்னமனூர் பகுதியில் தையல் வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனால் பிரபா மற்றும் ராஜேஷ்குமார் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பிரபா திடீரென உயிரிழந்துவிட்டதாகக் கூறி அவரது கணவர் ராஜேஷ்குமார் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தனது மகள் இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை ஜெயராம் உடனே அழகர்சாமி நகருக்கு வந்துள்ளார்.

இதனை அடுத்து தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக சின்னமனூர் காவல்நிலையத்தில் ஜெயராம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் உயிரிழந்த பிரபாவின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், பிரபா கழுத்து நெருக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ராஜேஷ்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் ஆத்திரத்தில் கழுத்தை நெறித்து கொன்றதாக போலீசாரிடம் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ராஜேஷ்குமாரை போலீசார் கைது செய்துள்லனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

Tags : #HUSBAND #WIFE #ARREST #POLICE #DEATH CASE #மனைவி #கணவன் #போலீஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Husband arrested by police in his wife death case | Tamil Nadu News.