Beast Others

மர்மமான முறையில் மனைவி மரணம்.. சில்லி சிக்கன் கடை நடத்தி வரும் கணவன் கைது.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 15, 2022 07:36 PM

சேலம் அருகே மர்மமான முறையில் இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Salem women mysterious death, Husband arrested by police

Also Read | திடீரென பயணியின் பையில் இருந்து வந்த புகை.. நடுவானில் நடந்த அதிர்ச்சி.. அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்..!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் அடுத்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 40). இவர் அப்பகுதியில் சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார். சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த சசிகலா என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சசிகலா தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறி அவரது சடலத்துடன் ஜெயக்குமார் தனது சொந்த ஊரான கோவிந்தராஜபாளையத்திற்கு சென்றுள்ளார். சந்தேகமடைந்த ஊர் மக்கள் தலைவாசல் அருகே சிறுவாச்சூரில் உள்ள சசிகலாவின் தாய் குப்பாயிக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து கணவர் ஜெயக்குமாரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவும், ஜெயக்குமாரும் அரசு கல்லூரியில் படித்த போது காதலித்துள்ளனர். இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது காதல் திருமணம் சசிகலாவின் பெற்றோருக்கு பிடிக்காததால், அவர்கள் இவர்களுடன் நெருக்கமாக இல்லை என சொல்லப்படுகிறது.

Salem women mysterious death, Husband arrested by police

இதனிடையே பி.எஸ்.சி, பி.எட் படித்துள்ள சசிகலா, ஆசிரியர் வேலைக்கு தகுதிதேர்வு எழுதுவதற்காக கடந்த சில மாதங்களாக கோச்சிங் கிளாஸ் சென்று வந்துள்ளார். இதில் மனைவியின் நடத்தையில் ஜெயக்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் கயிற்றை எடுத்து சசிகலாவின் கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டு, தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடியுள்ளார். இவை அனைத்தும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் சசிகலாவின் சடலத்தை போலீசாருக்கு தெரியாமல் எரிக்க உதவிய ஜெயக்குமாரின் பெரியப்பா செல்வராஜ் (வயது 55) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | IPL-ல் மறுபடியும் நுழைந்த கொரோனா.. ‘ஒருவருக்கு பாசிடிவ்’.. வெளியான பரபரப்பு தகவல்..!

Tags : #SALEM #WOMEN #DEATH #WOMEN MYSTERIOUS DEATH #HUSBAND #ARREST #POLICE #சேலம் #இளம்பெண்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Salem women mysterious death, Husband arrested by police | Tamil Nadu News.