'கடத்தி, அடைச்சு வெச்சு.. பாலியல் தொழிலில்'.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. பெண்கள் உட்பட 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 19, 2019 08:11 PM

13 வயது சிறுமியை கடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்துக்காக கரூரைச் சேர்ந்த 5 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

girl 13, kidnap, prostitution case: life sentence for 5

2017-ஆம் ஆண்டு வெங்கமேட்டைச் சேர்ந்த சரண்யா என்கிற 13 வயது சிறுமி திருப்பூருக்குக் கடத்திச் செல்லப்பட்டார். அங்கு அவர் அடைத்துவைக்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து இந்த குற்ற வழக்குடன் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.  முன்னதாக இவ்வழக்கை விசாரித்த கரூர் மகிளா விரைவு நீதிமன்றம், இதில் 2 பேரை முறையான சாட்சியங்கள் இல்லாததால் விடுவித்திருந்தது.

இந்த நிலையில், சிறுமியை இந்த நிலைக்கு ஆளாக்கிய மீதமுள்ள 5 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், அனைவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதத்தொகையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Tags : #KARUR #COURT