'நீங்க ஆசபட்டதுக்கு அந்த பிஞ்சு என்ன பாவம் பண்ணுச்சு'... 'வில்லியாக மாறிய பெற்ற தாய்'... நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jun 05, 2020 10:21 AM

நாம் நினைப்பது எல்லாம் நடக்க வேண்டும் என்பது மனிதனின் ஆசை தான். ஆனால் அது நடக்காமல் போகும் பட்சத்தில், எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை. ஆனால் இங்கு அந்த எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளாமல் ஒரு தாயே குழந்தைக்கு எமனாக மாறிய கொடூரம் அரங்கேறியுள்ளது.

Erode : Mother kills newborn baby, attempts suicide

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்குத் திருமணமாகி 10 வருடங்கள் ஆன நிலையில் 9 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் இரண்டாவது குழந்தைக்கு இருவரும் ஆசைப் பட்ட நிலையில், சங்கீதா கருவுற்றார். அந்த குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என இருவரும் ஆசைப் பட்டார்கள். இதையடுத்து குழந்தையும் பிறந்தது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போன்று இல்லாமல், அழகான பெண் குழந்தை பிறந்தது.

தேவதை போன்று அழகான பெண் குழந்தை பிறந்து இருக்கிறதே என்று சந்தோசப் படாமல் மீண்டும் பெண் குழந்தை பிறந்து விட்டதே என மன வருத்தத்தில் இருந்துள்ளார். ஆனால் அது இவ்வளவு பெரிய கொடூரத்தில் போய் முடியும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மன உளைச்சலின் உச்சத்திலிருந்த சங்கீதா, தனக்குப் பிறந்த 3 மாதங்களே ஆன பெண் குழந்தையை அண்டா தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெருந்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த மரணங்களில் வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற ரீதியிலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Erode : Mother kills newborn baby, attempts suicide | Tamil Nadu News.