தங்கையிடம் 'தவறாக' நடக்க முயற்சித்த அண்ணன்... கொலை செய்த 'தங்கை'... 'இல்ல' எங்க 'பையன்' அப்டி 'பண்ணியிருக்க' மாட்டான்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Jun 04, 2020 07:36 PM

உத்தரப் பிரதேசத்தில் உள்ள இட்டாவா மாவட்டத்தில் 20 வயது பெண்ணொருவர் தனது அண்ணனைக் கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

Brother try to abuse her sister and she murdered him

உத்தரப்பிரதேச மாநிலம் இட்டாவா என்னும் மாவட்டத்தை சேர்ந்தவர் தீபக் ராஜ்புத். கணினி தொடர்பாக சொந்த ஊரில் நிறுவனம் ஒன்றில் அவர் படித்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது பெற்றோர்கள் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது, வீட்டில் இருந்த தனது தங்கையிடம் அத்துமீற முயற்சி செய்ததாக தெரிகிறது. அப்போது அண்ணனிடம் இருந்து தப்பிக்க வேண்டி, அரிவாள் மற்றும் அம்மிக்கல்லைக் கொண்டு தங்கை, தனது அண்ணன் தீபக்கை தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே தீபக் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் தீபக்கின் தங்கை சரணடைந்தார். பின்னர், பெண்ணின் வீட்டிற்கு காவலாளர்களுடன் சென்ற போது, தீபக் அங்கு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீபக் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் மகன் தீபக் மீது குற்றம் சுமத்திய மகளின் கருத்தை அவரது பெற்றோர்கள் மறுத்துள்ளனர். மகன் அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை என பெற்றோர்கள் கூறியுள்ள நிலையில் தீபக்கின் தங்கையிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Brother try to abuse her sister and she murdered him | India News.