'உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு நினைவு கல்வெட்டு'... திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Oct 21, 2020 01:59 PM

காவலர் வீர வணக்க தினத்தையொட்டி பனியின் போதும், கொரோனா தொற்றாலும் உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு நினைவு கல்வெட்டினை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

Edappadi Palaniswami unveiled the Veterans Memorial Stones

காவல்துறையில் பணியின் போது உயிர் தியாகம் செய்த காவலர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் நாளை காவலர் வீர வணக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. சென்னையில் காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில், இந்த விழாவானது நடைபெறும்.  இதற்காக கடந்த 17ஆம் தேதி முதல் 4 நாட்களாக ஒத்திகை நடைபெற்று வந்தது.

இதனையடுத்து இன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் காவல்துறையினர் சார்பில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து பணியின் போதும், கொரோனா தொற்றினாலும் உயிர்த்தியாகம் செய்த வீரக் காவலர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள, 151 பேரின் உருவம் பொறித்த நினைவு கல்வெட்டினை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவை போற்றும் வகையில் மரக்கன்றுகள் நட்டனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Edappadi Palaniswami unveiled the Veterans Memorial Stones | Tamil Nadu News.