'விவாகரத்துக்கு' அப்புறம் இப்படி பண்ணிட்டாளே... மகளின் செயலால் 'மனமுடைந்து' தாய்-தந்தை தற்கொலை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Aug 11, 2020 05:58 PM

விவாகரத்து ஆன மகளின் செயலால் மனமுடைந்து தாய்-தந்தை இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

Couple Suicide near Tiruvallur District, Police Investigate

திருவள்ளூர் மாவட்டம் கோரகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (60). விவசாயி. இவருடைய மனைவி பாக்கியம் (55). இவர்களுக்கு அலமேலு(32), சந்தியா(29), ரோசி(27) என 3 மகள்கள் உள்ளனர். இதில் அலமேலு, சந்தியா இருவரும் திருமணமாகி அவரவர் கணவருடன் வசித்து வருகின்றனர். கடைசி மகள் ரோசிக்கு 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

கணவன்-மனைவி இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக ரோசி கணவரை விவாகரத்து செய்துவிட்டு தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார். இதற்கிடையில் ரோசிக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் காதல் ஏற்பட்டது. இதையறிந்த பெற்றோர் அவரை கண்டித்து இருக்கின்றனர். ஆனால் நேற்று முன்தினம் தன்னுடைய காதலருடன் ரோசி வீட்டைவிட்டு ஓடிவிட்டார்.

இதனால் மனவேதனை அடைந்த ஏழுமலை, பாக்கியம் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : #POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Couple Suicide near Tiruvallur District, Police Investigate | Tamil Nadu News.