சென்னையில் 'கல்லூரி' மாணவர் வெட்டிக்கொலை... தப்பி ஓடிய 7 பேர் 'கும்பலுக்கு' வலைவீச்சு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Jul 07, 2020 03:55 PM

நள்ளிரவில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

College Student Murdered near Vyasarpadi, Police Investigate

சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த்(22) இவர் அரும்பாக்கத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர்மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் நிலுவையில் ஒரு கொலை வழக்கு உள்ளது.

பிரசாந்தின் அம்மா விநாயகி, மீன் வியாபாரம் செய்து வருகிறார். விநாயகியுடன் மீன் வியாபாரம் செய்து வரும் அம்சா, பக்கத்து தெருவில் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் தினமும் அதிகாலையில் காசிமேட்டுக்கு மீன் வாங்க ஒன்றாக செல்வது வழக்கம். இதற்காக பிரசாந்த், அம்சாவை அழைத்துவர நேற்று முன்தினம் நள்ளிரவில் அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது வியாசர்பாடி தேசிங்கநாதபுரத்தை சேர்ந்த பாலச்சந்துரு உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் பிரசாந்தை வழிமறித்து வெட்டியது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் போலீஸ்க்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிருக்கு போராடிய பிரசாந்தை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரசாந்த் இறந்து விட்டார்.

இதையடுத்து தப்பி ஓடிய அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பாலச்சந்துரு பிடிபட்டால் தான் கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என்பதால் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. College Student Murdered near Vyasarpadi, Police Investigate | Tamil Nadu News.