'கொடூரமாக எரிக்கப்பட்ட சிறுமி'... வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jul 07, 2020 02:15 PM

திருச்சி அருகே சிறுமி எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில், சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

Charred body of 14-year-old found in Trichy, Autopsy Report Out

திருச்சி சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 9 ம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட வழக்கில் 11 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். குப்பை கொட்டச் சென்ற முள்காடு பகுதியில் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியை மர்ம நபர்கள் சிலர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்று இருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் நிலவி வந்தது.

இந்நிலையில் சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாகவில்லை எனப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Charred body of 14-year-old found in Trichy, Autopsy Report Out | Tamil Nadu News.