'ராசாத்தி சின்ன சூட்டை கூட தாங்க மாட்டாளே'... 'எப்படி துடிச்சிருப்பா'... 'சிறுமிக்கு நடந்த கொடூரம்'... பின்னணியில் இருப்பது யார்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jul 07, 2020 09:54 AM

புதுக்கோட்டைச் சிறுமிக்கு நடந்த கொடூரத்திலிருந்து நாம் மீள்வதற்குள் மீண்டும் ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது.

Charred body of 14 year old girl found. Police form 3 special team

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அதவத்தூர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகள் கங்காதேவி. 14 வயதான சிறுமி கங்காதேவி எட்டரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது விடுமுறை என்பதால் வீட்டிற்கு அருகில் உள்ள சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். பின்னர் வீட்டிற்குச் சென்ற கங்கா வீட்டில் உள்ள குப்பைகளை எடுத்துக் கொண்டு முள்காட்டில் கொட்டச் சென்றுள்ளார். ஆனால் வெகு நேரம் ஆகியும் சிறுமி வீட்டிற்கு வராததால், சிறுமியின் பெற்றோர் பதறிப் போனார்கள்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் சிறுமியைத் தேடிப் பார்த்துள்ளார்கள். அப்போது குப்பை கொட்டச் சென்ற முள்காடு பகுதியில் சிறுமி, உடல் கருகிய நிலையில் சடலமாகக் கிடந்தார். இதையடுத்து சம்பவம் குறித்து அறிந்த திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் மற்றும் சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆக்கப்பட்டாரா என்பது குறித்துத் தெரிய வரும் என போலீசார் கூறியுள்ளார்கள். இதையடுத்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே சிறுமியின் உடல் கிடப்பதாக அடையாளம் காட்டிய உறவினர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியின் உடல் இங்குக் கிடக்கிறது என்பது உங்களுக்கு எப்படித் தெரியும், அவர்களுக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பகுதியில் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். தற்போது மற்றொரு மாணவி கொலை செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Charred body of 14 year old girl found. Police form 3 special team | Tamil Nadu News.