'சென்னையில் வெளுத்து வாங்கும் மழை'... ஏரிகள் குறித்து மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Nov 12, 2020 07:39 PM

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பெரும்பாலான மாவட்டங்களில் மழை செய்து வருகிறது. சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் திடீரென கனமழை பெய்கிறது. இன்று காலை முதல் சென்னையின் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.

Central water board instruct to monitor chennai lakes

இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிகக்கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையின் நீராதாரமான ஏரிகளைக் கண்காணிக்க மத்திய நீர் வள ஆணையம் வலியுறுத்தியுள்ளது. செம்பரபாக்கம், பூண்டி ஏரிகளில் உள்ள நீர் அளவு மற்றும் நீர்வரத்து ஆகியவற்றைக் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இந்த எச்சரிக்கை விடப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags : #RAIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Central water board instruct to monitor chennai lakes | Tamil Nadu News.