‘பூஜ்ஜியம்’!.. நீண்ட நாள்களுக்கு பின் சென்னை மக்களுக்கு ஒரு ‘குட் நியூஸ்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jul 12, 2021 09:40 AM

சென்னையில் நீண்ட நாள்களுக்கு பிறகு கொரோனா தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

After months, Chennai reported zero covid-19 death

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றின் 2-ம் அலை வேகமாக பரவியது. அதனால் நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் வரை நோய் தொற்று ஏற்பட்டது. இதன்காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. தொடர்ந்து 51-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

After months, Chennai reported zero covid-19 death

அந்த வகையில் நேற்று (11.07.2021) மாநிலத்தில் 2775 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 171 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

After months, Chennai reported zero covid-19 death

கடந்த மே மாதம் சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்ட நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று சென்னையில் ஒரு கொரோனா உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதிதான் சென்னையில் கொரோனா உயிரிழப்புகள் பூஜ்ஜியமாக இருந்தது.

After months, Chennai reported zero covid-19 death

இதுவரை தமிழ்நாட்டில் மொத்தமாக 33,418 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் மாநிலம் முழுவதும் 47 கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதில் இணை நோய் இல்லாத 9 பேரும், 50 வயதுக்கு குறைவானவர்கள் 8 பேரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. After months, Chennai reported zero covid-19 death | Tamil Nadu News.