தம்பி இறங்குங்க...! ஏன் இப்படி படுத்துறீங்க...? 'மெரினாவில் உள்ள போஸ்ட் தூணில் ஏறி அட்டகாசம்...' - கடைசியில் தெரிய வந்த உண்மை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jun 30, 2021 05:19 PM

மெரினாவில் குடிபோதையில் மின்கம்பத்தில் ஏறிய வாலிபரை 2 மணி நேர போரட்டத்துக்கு பிறகு மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

drunken boy who climbed a power pole in the marina

சென்னை மெரினா கடற்கரை சாலையில், மாலை 6 மணி அளவில் குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவர் அங்கிருந்த உயரமான மின்கம்பத்தில் ஏறியுள்ளார். இதை கவனித்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கம்பத்தின் உச்சிக்கு சென்ற அந்த இளைஞர் அங்கேயே வெகுநேரமாக உட்கார்ந்துள்ளார். இதை கவனித்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவலும் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த இளைஞரை கீழே இறங்கும் படி கூறினர். ஆனால் அவர் இறங்கியபாடு இல்லை.

அதன்பின் போலீசார் தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுத்த நிலையில், திருவல்லிகேணி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் எழும்பூர் தீயணைப்பு வீரர்களும் ‘ஸ்கை லிப்ட்’ வாகனம் மூலம் அந்த வாலிபரை கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு அவரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக கீழே இறக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பின் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் கஞ்சா போதையில் மின் கம்பத்தில் ஏறியது தெரியவந்தது. அந்த இளைஞர் தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் மெரினாப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Drunken boy who climbed a power pole in the marina | Tamil Nadu News.