'அரபிக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி'... வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Nov 19, 2020 06:33 PM

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய நல்ல மழை இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9 districts of tamil nadu will get heavy rain in next 24 hours

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரு தினங்களில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், வடதமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் எனக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகத் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

Tags : #RAIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 9 districts of tamil nadu will get heavy rain in next 24 hours | Tamil Nadu News.