“4 பேருக்கு கொரோனா உறுதி!”.. முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு வந்த பரிசோதனை முடிவுகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jun 19, 2020 11:45 AM

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

4 covid19 cases CM office chennai முதல்வர் ஆபீஸில் 4 பேருக்கு கொரோனா

சென்னையில் மட்டும் 30 ஆயிரடம் பேருக்கு மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரைக்கும் மொத்தம் 28 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி, டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

இந்த நிலையில் பொதுப் பணியாளர்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையைச் சேர்ந்த காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவுக்கு பலியானார்.  இதனிடையே முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் துணை இயக்குனர் ஒருவருக்கும், அலுவலக உதவியாளர் இருவருக்கும், ஓட்டுனர் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 4 covid19 cases CM office chennai முதல்வர் ஆபீஸில் 4 பேருக்கு கொரோனா | Tamil Nadu News.