2 பேர் பலி!..‘சானிட்டைஸர் மற்றும் ஹேண்ட்வாஷ் தயாரிக்கும் கெமிக்கல் ஃபேக்டரியில் பயங்கர விபத்தால் நேர்ந்த சம்பவம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 13, 2020 10:03 PM

மகாராஷ்டிராவில் உள்ள பால்கரில் தாராபுர் பகுதியில் கெமிக்கல் தொழிற்சாலையில் சானிட்டைஸர் தயாரிக்கும் யூனிட்டில் விபத்து ஏற்பட்டதால் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 killed after a Blast at sanitizer and hand wash unit

கொரோனா வைரஸ் தொற்றை சமாளிக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் கொரோனா பரவுவதலை தடுக்க, கை கழுவதல், சானிட்டைஸர் உபயோகப்படுத்தல் உள்ளிட்டவை வலியுறுத்தப்படுவதை அடுத்து ஹேண்ட் வாஷ் மற்றும் சானிட்டைஸருக்கான டிமாண்ட் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதனால் சானிட்டைஸர் தொழிற் பிரிவு மட்டும் மகாராஷ்டிராவில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள குறிப்பிட்ட கெமிக்கல் தொழிற்சாலையின் சானிட்டைஸர் மற்றும் ஹேண்ட் வாஷ் தயாரிக்கும் யூனிட் ஒன்றில் காலை 11 மணி அளவில் நடந்த தீவிபத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.