பிசிசிஐ தலைவராக சார்ஜ் எடுத்த ‘தாதா’ கங்குலி..! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Oct 23, 2019 12:16 PM

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலி இன்று பொறுப்பேற்றார்.

Sourav Ganguly was officially elected as the BCCI president

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சில தினங்களுக்கு முன்பு பிசிசிஐ தலைவர் பதவிக்கு விண்ணப்பித்தார். இந்நிலையில் தேர்தலில் யாரும் எதிர்த்து போட்டியிடாததால் பிசிசிஐ தலைவராக கங்குலி தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து இன்று (23.10.2019) முறைப்படி பிசிசிஐ கூட்டத்தில் 39-வது பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்றார்.

இதனைத் தொடர்ந்து செயலாளர் பதவிக்கு ஜெய் ஷாவும், துணை செயலாளராக ஜெயீஸ் ஜார்ஜ் மற்றும் பொருளாளராக அருண் துமாலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Tags : #BCCI #SOURAVGANGULY #BCCIPRESIDENT #TEAMINDIA