மகன் பிறந்த கொஞ்ச நேரத்தில்.. சிஎஸ்கே அணியில் கிடைத்த இடம்.. டபுள் சந்தோஷத்தில் பிரபல வீரர்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Feb 13, 2022 07:58 PM

பெங்களூரில் நேற்று தொடங்கிய ஐபிஎல் மெகா ஏலம், இரண்டாவது நாளாக, மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

popular indian player blessed with baby boy select in csk

பத்து அணிகள், 15 ஆவது ஐபிஎல் தொடரில், பங்கேற்கவுள்ள நிலையில், ஒவ்வொரு வீரர்களையும் அணியில் எடுக்க, மாறி மாறி கடுமையாக போட்டி போட்டது.

சில அணிகள், மற்ற அணிகளின் தொகையை உயர்த்தி விட்டு, அமைதியாக இருந்தும், ஐபிஎல் ஏலத்தை சுவாரஸ்யப்படுத்தினர்.

சிஎஸ்கே ரசிகர்கள்

ஏலத்திற்கு முன்னதாக, கடந்த சீசனில் கோப்பையைக் கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வியூகம், எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உருவாகியிருந்தது. எப்படிப்பட்ட வீரர்களை அணியில் சேர்க்கும் என்றும், எந்தெந்த புதிய வீரர்களை தோனி மற்றும் சிஎஸ்கே நிர்வாகம் குறி வைக்கும் என்பதையும் பார்க்கும் ஆவல், சிஎஸ்கே ரசிகர்களிடம் இருந்தது.

ரெய்னா - டுபிளஸ்ஸிஸ்

ஆனால், ஏலத்தின் முதல் நாளில், சிஎஸ்கே மேற்கொண்ட நடவடிக்கை, பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. முதல் நாளில் சிஎஸ்கே எடுத்த 6 வீரர்களில், 5 பேர் கடந்த சீசனில், சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் தான். இன்னொரு பக்கம், ரெய்னா மற்றும் டு பிளஸ்ஸிஸ் ஆகிய சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்களை எடுக்காத சிஎஸ்கே, பிராவோ, உத்தப்பா உள்ளிட்ட வீரர்களை மீண்டும் எடுத்திருந்தது.

இது பற்றி, ஐபிஎல் ரசிகர்கள் பலரும் அதிகமான கேள்விகளை எழுப்பியிருந்தனர். ஆனால், இரண்டாம் நாளில், டெவான் கான்வே, ஆடம் மில்னே, சிவம் துபே உள்ளிட்ட சிறப்பான வீரர்களை எடுத்திருந்தது. இதில், இரண்டாம் தினத்தில் சிஎஸ்கே அணி, முதல் வீரராக ஆல் ரவுண்டர் ஷிவம் துபேவை எடுத்திருந்தது.

ஆல் ரவுண்டர் ஷிவம் துபே

கடந்த சீசனில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய சிவம் துபேவை ஏலத்திற்கு முன்பாக, அந்த அணி விடுத்திருந்தது. தொடர்ந்து, இன்று நடைபெற்ற ஏலத்தில், சிஎஸ்கே அணி அவரை 4 கோடி ரூபாய்க்கு எடுத்திருந்தது. கடந்த சீசனில், பெரிய அளவில் சோபிக்காத ஷிவம் துபே, இந்த முறை தோனியின் கேப்டன்சியில் சிறப்பாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பும், சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

டபுள் கொண்டாட்டம்

ஒரு பக்கம், சிஎஸ்கே அணியில், ஷிவம் துபே தேர்வாக, இன்னொரு பக்கம் அவருக்கு ஆண் குழந்தையும் இன்று பிறந்துள்ளது. கடந்த ஆண்டு, அஞ்சும் கான் என்பவரைத் திருமணம் செய்திருந்த ஷிவம் துபேக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஒரே நாளில், இரண்டு சிறப்பான நிகழ்வுகள் நடந்துள்ளதால், ஆனந்தத்தில் துள்ளிக் குதித்துள்ளார் துபே.

மனைவி அஞ்சும் கான் மற்றும் தனது குழந்தை இருக்கும் புகைப்படத்தை, ஷிவம் துபே இன்ஸ்டாக்ராமில் பகிர்ந்துள்ள நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சிஎஸ்கே அணிக்காக ஆடத் தேர்வானதையும், ரசிகர்கள் வாழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : #CHENNAI-SUPER-KINGS #SHIVAM DUBE #BABY BOY #CSK #IPL AUCTION 2022 #ANJUM KHAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Popular indian player blessed with baby boy select in csk | Sports News.