legend others

‘தோனியின் ஓய்வு முடிவு’... 'சிஎஸ்கே அணி சிஇஓ-வின் பதில் இதுதான்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 18, 2019 11:34 AM

‘தோனி தன்னுடைய ஓய்வு முடிவு குறித்து தங்களிடம் எதுவும் கூறவில்லை’ என சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

ms dhoni will continue his Captaincy for CSK says CEO

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில், கிரிக்கெட் விளையாடும் மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தோனி ஓய்வு பெறுவதாக எந்த தகவலும் தங்களுக்கு வரவில்லை. எப்படியும் அவர் சிஎஸ்கேவுக்கு ஆடுவார். அது நிச்சயம். 3 வருட ஒப்பந்த காலம் முடியும் வரை, சிஎஸ்கே கேப்டனாக, தோனி தொடர்வார் எனவும், ஓய்வு குறித்து தோனி எதுவும் கூறவில்லை’ என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, உலகக் கோப்பை தொடருடன் தோனி ஓய்வு பெறுவார் என கூறப்பட்ட நிலையில், உலகக் கோப்பை தொடரில் அவர் மீது விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டது. அதனால், தோனி ஓய்வு பெறப் போகிறார் என்ற வதந்தி மிக வேகமாக பரவியது. எனவே, தோனி இப்போதைக்கு ஓய்வு பெற வாய்ப்பு இல்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி, அறிவிப்புக்கு பின்னரே, பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் எனத் தெரிகிறது.

Tags : #MSDHONI #CSK