‘10 நாட்களாக’... ‘தனிமையாக்கப்பட்ட வைர இளவரசி’... ‘காப்பாற்ற கோரிய நிலையில்’... ‘இந்தியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Feb 12, 2020 09:25 PM

2 வார காலமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில், இந்தியர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Two Indians have confirmed Coronavirus infection +Ve

ஹாங்காங்கில் இருந்து, 3,711 பேருடன் ஜப்பான் சென்ற 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற சொகுசு கப்பல், கொரோனா வைரஸ் பயத்தால், ஜப்பானின் யோக்கோஹாமா துறைமுகம் அருகே கடந்த 3-ம் தேதி நிறுத்தப்பட்டது.  அப்போது நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், 80 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால், கொரோனா பரவாமல் இருக்க பிப்ரவரி 19-ம் தேதி வரை அங்கேயே கப்பல் நிற்கும் என ஜப்பான் தெரிவித்திருந்தது.

அந்த கப்பலில் 6 தமிழர்கள் உள்பட 132 பணியாளர்கள் மற்றும் 6 பயணிகள் என மொத்தம் 138 இந்தியர்கள் சிக்கியிருந்தனர். கொரோனா பரவிடுமோ என்று பயமாக உள்ளதால், தங்களை உடனடியாக விரைந்து காப்பாற்றுமாறு இந்தியர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் கோரிக்கை விடுத்த நிலையில், 2 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

முதலில் ஒருவருக்கு மட்டுமே இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு, 10 நாட்களில் மெல்ல மெல்ல பரவி, இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் 2 இந்தியர்கள் உள்பட கப்பலில் உள்ள 174 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக கூறப்படுவது வேதனையளிக்கிறது.

Tags : #CORONAVIRUS #INDIAN #SHIP #AFFECTED #INFECTION #POSITIVE RESULTS