காதலன் திருமணத்த நிறுத்தணும்.. ஹாஸ்பிடல்'ல குழந்தையை திருடி.. பெண் போட்ட திட்டம்.. தலையே சுத்துதுப்பா சாமி

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Jan 10, 2022 07:38 PM

கேரளா : அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தை திருட்டு போயிருந்த வழக்கில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

kerala woman kidnaps child from hospital to blackmail her lover

கேரள மாநிலம், கோட்டயம் பகுதியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன், அஸ்வதி என்ற பெண்ணிற்கு குழந்தை ஒன்று அங்கு பிறந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, குழந்தை பிறந்த மூன்றாம் நாளில், டாக்டரை போல வந்த பெண் ஒருவர், குழந்தைக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தாய் அஸ்வதியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, குழந்தையை அந்த பெண் எடுத்துச் சென்றுள்ளார்.

குழந்தையுடன் மாயமான பெண்

சில மணி நேரமாக குழந்தையைக் கொண்டு சென்ற பெண், திரும்ப வரவில்லை. பின்னர், அங்குள்ள மருத்துவர்களிடம் இது பற்றி அஸ்வதி கேட்ட போது தான், குழந்தையை எடுத்துச் சென்ற பெண் மருத்துவர் இல்லை என்பது தெரிய வந்தது. இதனால், அவர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். இதனைத் தொடர்ந்து, அங்குள்ள கேமராவை பரிசோதித்த போது, பெண் ஒருவர் மருத்துவர் உடையில், குழந்தையை எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

 

டாக்சி வேண்டும்

உடனடியாக, குழந்தை காணாமல் போனது பற்றி, அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவமனைக்கு வந்த போலீசார், விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, கோட்டயம் மருத்துவ கல்லூரி அருகேயுள்ள ஹோட்டல் ஒன்றில் ஒரு பெண் அறை எடுத்து தங்கியுள்ளார். நீதுராஜ் என்ற அந்த பெண், தான் தங்கியிருந்த ஹோட்டல் ரிஷப்ஷனுக்கு அழைத்து, பிறந்து மூன்று நாட்களே ஆன தனது குழந்தையின் சிகிச்சைக்காக வேறு ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், டாக்சி ஒன்றை ஏற்பாடு செய்யும் படியும் தெரிவித்துள்ளார்.

kerala woman kidnaps child from hospital to blackmail her lover

வலுத்த சந்தேகம்

அதன் பிறகு, ரிஷப்சனிஸ்ட் பெண், அருகேயுள்ள டாக்சி டிரைவர் ஒருவருக்கு அழைத்து, ஹோட்டலில் உள்ள பெண், புதிதாக பிறந்த குழந்தையுடன் வேறு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டதும் டாக்சி டிரைவர் அலெக்ஸ் அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம், அந்த சமயத்தில் தான், கோட்டயம் மருத்துவமனையில் பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தை காணாமல் போனது பற்றி, அவர் கேள்விப் பட்டிருந்தார்.

kerala woman kidnaps child from hospital to blackmail her lover

டாக்சி டிரைவரின் சாதுர்யம்

அதே போன்று, ஹோட்டலில் பெண் ஒருவர் குழந்தையுடன் இருப்பதை அறிந்த அலெக்ஸ், சந்தேகம் அடைந்துள்ளார். இதனை ரிஷப்ஷனில் இருந்த பெண்ணிடமும் அலெக்ஸ் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தை ஹோட்டல் மேனேஜரிடம் அந்த பெண் தெரிவிக்க, நீதுராஜ் குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்ததும், அங்கிருந்து உடனடியாக சென்ற ஹோட்டல் சென்ற போலீசார், அஸ்வதியின் குழந்தையை மீட்டனர்.

kerala woman kidnaps child from hospital to blackmail her lover

அதிர்ச்சி தகவல்கள்

டாக்சி டிரைவர் மற்றும் ரிஷப்சனிஸ்ட் ஆகியோரின் சாதுர்யத்தால், குழந்தை கிடைத்ததை எண்ணி அனைவரும் மகிழ்ந்தனர். ஆனால், குழந்தையை நீதுராஜ் ஏன் கடத்தினார் என்பது பற்றி, பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த போலீசார் விசாரணையில், நீதுராஜ் என்ற அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரிய வந்துள்ளது.

கர்ப்பம் அடைந்த பெண்?

இவருக்கு 8 வயதில் ஒரு மகனும் உள்ளதாக கூறப்படுகிறது. நீத்துராஜின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ள நிலையில், சமூக வலைத்தளம் மூலம், இப்ராஹிம் என்பவருடன், நீத்து ராஜிற்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த உறவின் மூலம், நீதுராஜ் கர்ப்பம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இது பற்றிய தகவலை, இப்ராஹிமிடம் நீத்துராஜ் தெரிவித்துள்ளார்.

குழந்தையுடன் செல்ஃபி

ஆனால், குழந்தை கருவிலேயே கலைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, வேறு ஒரு திருமணம் செய்ய இப்ராஹிம் தயாராகியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த நீதுராஜ், தனது காதலன் தனக்கு கிடைக்க வேண்டி, மருத்துவமனையில் இருந்து குழந்தை ஒன்றைத் திருடியுள்ளார். அது தனக்கு பிறந்த குழந்தை என கூறி, இப்ராஹிமை மிரட்டியுள்ளார். குழந்தையுடன் ஹோட்டலுக்கு வந்த நீதுராஜ், செல்ஃபி எடுத்து, இப்ராஹ்மிற்கும் அனுப்பியதாக கூறப்படுகிறது.

kerala woman kidnaps child from hospital to blackmail her lover

தொடரும் விசாரணை

அந்த சமயத்தில் தான், டாக்சி டிரைவரின் சந்தேகத்தால், குழந்தையைத் திருடி, போலீசாரிடம் சிக்கியுள்ளார் நீத்துராஜ். இதனைத் தொடர்ந்து, நீத்துராஜ் மற்றும் இபர்ஹிம் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணத்திற்கு பிறகு, ஏற்பட்ட தகாத உறவால், காதலனை மிரட்ட வேண்டி, மருத்துவமனை சென்று குழந்தை திருடிய பெண்ணால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : #KERALA

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kerala woman kidnaps child from hospital to blackmail her lover | India News.