'நெஞ்சை சுக்குநூறாக்கிய மனைவியின் திடீர் மரணம்'... 'ஆசை ஆசையாய் கட்டிய வீட்டில் என் மனைவி இருக்கணும்'... ஆசை கணவன் செய்த நெகிழ வைக்கும் செயல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Aug 11, 2020 08:20 AM

கணவன், மனைவி உறவு என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகள் என அனைத்து உறவுகளுக்கும் ஏதாவது ஒரு ரத்த சொந்தம் என்று ஒன்று உண்டு. ஆனால் எந்த சொந்தமும் இல்லாமல், கடைசி மூச்சு வரை நம்முடன் வரும் உறவு தான் கணவன், மனைவி உறவு என்பது. அதனால் தான் மனைவி போனால் சகலமும் போச்சு என்ற கூற்று ஒன்று உண்டு. திருமணமாகி குழந்தைகள் பிறந்து, அந்த குழந்தைகள் வளர்ந்து அவர்களைப் படிக்க வைத்து, அவர்களுக்கு ஒரு திருமணமும் செய்து வைத்த பின்னர், முதுமையில் வரும் தனிமையில் கணவனும், மனைவியும் சேர்ந்து கடந்த கால நிகழ்வுகளை அசை போடுவது என்பது ஒரு அலாதியான இன்பம்.

Karnataka man installed a wax statue of his beloved wife

அதே நேரத்தில் கணவனோ, மனைவியோ திடீரென இறந்து விட்டால் அந்த மீளா துயரிலிருந்து மீள்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். மனைவியோ, கணவனோ இல்லாமல் இருக்கும் தனிமை என்பது கொடுமையிலும், கொடுமை. அந்த வகையில் தான் உயிருக்கு உயிராக நேசித்த மனைவி திடீரென சாலை விபத்தில் இறந்து விட, நொறுங்கிப் போனார் கர்நாடக மாநிலம் பெல்லாரி அருகே உள்ள கொப்பல் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவர். சில வருடங்களுக்கு முன்பு நடந்த மனைவியின் பிரிவை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

இந்நிலையில் கிருஷ்ணா ஆசை ஆசையாய் கட்டிய வீட்டிற்குப்  புதுமனை புகுவிழா நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த அழகான நிகழ்வைப் பார்க்கத் தனது மனைவி இல்லையே என ஏங்கிய அவர், மனைவியின் பங்கேற்பும் இருக்க வேண்டும் என முடிவு செய்தார். இதையடுத்து மனைவியின் உருவம் போன்ற மெழுகு சிலையைத் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட இந்த சிலையை, உற்றார் உறவினர் பிரமிப்போடு பார்த்துச் சென்றனர். நிகழ்ச்சி தொடங்கியதும் கண் கலங்கிய கிருஷ்ணாவை அவரது மகள்கள் தேற்றினார்கள்.

Karnataka man installed a wax statue of his beloved wife

இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்துப் பேசிய அவரது இரு மகள்கள், ''அப்பா, அம்மா மீது வைத்திருந்த அன்பு என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. அம்மாவின் மரணம் அப்பாவை நிலைகுலையச் செய்து விட்டது. ஆனால் தற்போது தங்களின் தாயார் மீண்டும் உயிரோடு வந்ததாகவே நாங்கள் நினைப்பதாக'' மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Karnataka man installed a wax statue of his beloved wife | India News.