‘கொரோனா சிகிச்சை பெற்ற கணவரை காணோம்’.. மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த ‘பதில்’.. அதிர்ச்சியில் உறைந்த மனைவி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | May 22, 2020 11:47 AM

கொரோனா சிகிச்சை பெற்று வந்த கணவரை காணவில்லை என மனைவி புகார் அளித்த நிலையில், அவரது உடலை தகனம் செய்துவிட்டோம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hyderabad woman claims her Covid19 positive husband missing

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு காரணமாக காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்பெண்ணுடன் அவரது இரண்டு மகள்களும் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனை அடுத்து கடந்த 16ம் தேதி மூவரும் குணமடைந்து வீடு திரும்பினர். ஆனால் இவர்களுக்கு முன்னதாக அப்பெண்ணின் கணவர் கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி தனியார் மருத்துவமனையில் ஒன்றில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் ஏப்ரல் 30ம் தேதி அவரும் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்வில்லை. இதனால் கொரோனா சிகிச்சை பெற்று வந்த தனது கணவரை காணவில்லை என தெலுங்கானா தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கே.டி.ராமாவிடம் ட்விட்டரில் அப்பெண் புகார் அளித்தார். இதனை அடுத்து அப்பெண்ணின் கணவர் இறந்துவிட்டதாகவும், அவரை கடந்த மே 1ம் தேதி அன்று தகனம் செய்துவிட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

மேலும் இதுதொடர்பாக அந்த நபரின் குடும்பத்தினரிடம் உரிய தகவல் தெரிவித்துவிட்டதாகவும், அப்பெண் காரணமின்றி மருத்துவமனை நிர்வாகம் மீது குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Hyderabad woman claims her Covid19 positive husband missing | India News.