'மாமனார் என்ன நல்லா பத்துக்குறாரு'... 'அதுனால, ஆடிப் போன உறவினர்கள்'... 'மருமகள்' கொடுத்த சர்ப்ரைஸ்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசில சம்பவங்களை நாம் கேள்விப்படும் போது இப்படி கூட நடக்குமா என நமக்கு எண்ணத் தோன்றும். அது நமக்கு பெரும் வியப்பாக இருக்கும். அது போன்ற ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.
![Father in Law marries Daughter in Law after Son Died Father in Law marries Daughter in Law after Son Died](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/father-in-law-marries-daughter-in-law-after-son-died.jpg)
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்தவர் ஆர்த்தி சிங். 21 வயது இளம் பெண்ணான இவருக்குக் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குடும்ப வாழ்க்கையைச் சந்தோசமாக ஆரம்பிக்கலாம் என ஆசையாக இருந்த அவரின் கனவு பாதியில் தகர்ந்து போனது. திடீரென அவரது கணவர் இறந்து போனார். என்ன செய்வது எனத் தெரியாமல், இளம் வயதில் கணவனை இழந்த ஆர்த்தி தனிமையில் தவித்துள்ளார்.
இந்நிலையில் தனிமையில் தவித்து வந்த ஆர்த்தியை அவரது மாமனார் கிருஷ்ணா ராஜ்புத் சிங், நன்றாகக் கவனித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ராஜ்பூத் க்ஷத்ரிய மகாசபாவின் குழு அமைப்பின் முன்னெடுப்பில் ஆர்த்தியை அவரது மாமனார் கிருஷ்ணா ராஜ்புத் சிங் திருமணம் செய்து கொண்டுள்ளார். கணவர் இறந்து 2 வருடமானதால் ஆர்த்தி சிங்கின் மறுமணத்திற்குச் சாதிய அமைப்பினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த செய்தி ஆர்த்தியின் குடும்பத்தினருக்குச் சற்று அதிர்ச்சியைக் கொடுத்தது.
ஆனால் கணவனை இழந்து பல இன்னல்களைச் சந்தித்த எனக்கு மாமனார் தான் உதவியாக இருந்தார். எனவே அவரை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆர்த்தி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக அரசின் விதிமுறைக்கு உட்பட்டு ராஜ்பூத் க்ஷத்ரிய மகாசபாவினர் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இதனிடையே இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலானதையடுத்து, பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)