மக்கள் 'அடர்த்தி' நிறைந்த 'தாராவியில்'... கொரோனாவால் ஒருவர் பலியானதால் 'பரபரப்பு'... குடியிருப்புக்கு 'சீல்'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Apr 02, 2020 11:43 AM

மும்பை தாராவி பகுதியில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Covid-19 Mumbai Dharavi Man Who Had Coronavirus Infection Dies

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதிகளில் ஒன்றான மும்பையிலுள்ள தாராவி பகுதியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். 56 வயதான அவருக்கு பரிசோதனையில் கொரோனா  பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வெளிநாடு எதுவும் செல்லவில்லை எனக் கூறப்படும் நிலையில், மக்கள் அடர்த்தி நிறைந்த பகுதியான தாராவியில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளது அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து உயிரிழந்த நபர் வசித்து வந்த  குடியிருப்பு முழுவதும் சீல் வைக்கப்பட்டு,  அந்தக் கட்டிடத்தில்  வசிப்பர்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Tags : #MUMBAI #CORONAVIRUS #DHARAVI #DEAD