VTK D Logo Top

"எவ்ளோ கூப்பிட்டும் கண் தொறக்கல".. பதற்றம் அடைந்த மனைவி.. திருமணத்தன்று இரவே புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Sep 15, 2022 06:07 PM

பொதுவாக, திருமணம் என்றாலே மணமக்கள் இருவருக்கும் மிக மிக முக்கியமான ஒரு தினமாகும். இருவருடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்தின் தொடக்கமாக இந்த தினம் பார்க்கப்படுவதால், மிகவும் எதிர்பார்ப்புடன் திருமண நாளில் அவர்கள் இருப்பார்கள்.

andhra new groom passed away in first night of his marriage

Also Read | "குழந்தைங்க பசியோட இருக்க கூடாது".. "தாயுள்ளத்தோட".. பள்ளிகளில் காலை உணவு திட்டம்.. உதயநிதி போட்ட ட்வீட்!!

இந்த திருமண நாளில், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் வழங்குவார்கள்.

அப்படி ஒரு சூழ்நிலையில், திருமணம் முடிந்த அதே நாள் இரவு, மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம் தொடர்பான செய்தி, கடும் சோகத்தை உண்டு பண்ணி உள்ளது.

ஆந்திர மாநிலத்தின் மதனபள்ளியை சேர்ந்தவர் துளசி பிரசாத். இவருக்கும் சிரிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த சில தினங்களுக்கும் முன் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி இருக்கையில், திருமணம் முடிந்து அனைவரும் கிளம்ப, புது ஜோடிக்கு முதலிரவு ஏற்பாடுகளும் செய்யப்ட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்போது தான், தனது அறையில் சுயநினைவின்றி மாப்பிள்ளை துளசி பிரசாத் கிடந்ததாக கூறப்படுகிறது. இதனால், தனது கணவரை சிரிஷா தட்டி எழுப்ப முயன்றுள்ளார். ஆனாலும் அவர் எழாத நிலையில், கணவரின் உடல்நிலை பற்றி குடும்பத்தினரிடம் தகவல் கூறி உள்ளார் சிரிஷா. இதனால், அங்கிருந்த அனைவரும் பதறி போகவே, உடனடியாக பிரசாத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.

ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், துளசி பிரசாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். திருமணமான முதல் நாள் இரவிலேயே புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம், மணப்பெண் சிரிஷா மற்றும் மொத்த குடும்பத்தாரையும் கடும் வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.

ஏற்கனவே துளசி பிரசாத் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த சம்பவம் அந்த கிராமம் முழுவதையும் சோகத்தில் கலங்கடித்துள்ளது.

Also Read | கிரிக்கெட் அம்பையர் டூ குட்டிக் கடை முதலாளியாக மாறிய பிரபலம்.. திடீரென மாரடைப்பால் நேர்ந்த துயரம்!!

Tags : #ANDHRA PRADESH #GROOM #ANDHRA NEW GROOM PASSED AWAY #MARRIAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Andhra new groom passed away in first night of his marriage | India News.