'நிறைய டைம் கொடுத்து பார்த்தாச்சு...' 'இனி முடியாது...' - 'மாஸ்டர் கார்டுக்கு' ரிசர்வ் வங்கி வைத்த ஆப்பு...!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Issac | Jul 14, 2021 07:50 PM

வரும் ஜூலை 22 முதல் புதிய வாடிக்கையாளர்களுக்கு மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட், கிரெடிட் கார்டுகளை வழங்க ரிசர்வ் வங்கி தடைவிதித்துள்து.

RBI has banned the issuance of MasterCard debit cards

அதன்படி ஜூலை 22 முதல் புதிய வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளால் மாஸ்டர் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்க முடியாது.

ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு விதிமுறைக்கு காரணம், மாஸ்டர் கார்டு நிறுவனம், வாடிக்கையாளர்களின் விவரங்களை சேமிக்கும் சர்வரை இந்தியாவில் வைக்காததால் ரிசர்வ் வங்கி இந்த விதிமுறைகளை விதித்துள்ளது.

அதோடு இதற்கு முன்பு பல முறை காலக்கெடுவும், அதிக நேரம் மற்றும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தாலும், பணம் செலுத்தும் முறை தரவு சேமிப்பிற்கான வழிமுறைகளுக்கு இந்த நிறுவனம் இணங்கவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அதன் பின்னரே, ரிசர்வ் வங்கி இந்த முடிவுக்கு வந்துள்ளது. அதோடு, புதிய தடையால் பழைய மாஸ்டர் கார்டு தொடரும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. RBI has banned the issuance of MasterCard debit cards | Business News.