டிக் டாக் செயலி மூலம் பிரபலமான சிறுமி மரணம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேரளாவில் டிக் டாக் செயலி மூலம் மலையாள ரசிகர்களை கவர்ந்தவர் 9 வயதான ஆருணி எஸ்.குருப். இவர் தனது டிக் டாக் செயலி மூலம் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி வந்தார்.

Tik Tok Fame Aaruni Kurup Passed Away due to brain disease

இந்நிலையில் இவருக்கு நீண்ட நாட்களாக காய்ச்சல் மற்றும் தலையில் வலி இருந்து வந்திருக்கிறது. ஆருணியை மருத்துவர்கள் பரிசோதித்த போது அவருக்கு இதுவரை அறியப்படாத நோய் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.

அதற்காக அவர் தற்போது திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். சிகிச்சை பலனின்றி அவர் இறந்ததாக கூறப்படுகிறது. அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த அவரது தந்தையும் கடந்த வருடம் ஒரு விபத்தில் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிக் டாக் செயலி மூலம் பிரபலமான சிறுமி மரணம் வீடியோ