www.garudabazaar.com

ஆரத்தி எடுத்து வரவேற்ற குடும்பம்... பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சம்யுக்தா வெளிட்ட பதிவு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாலும், தற்போது தனது கருத்துக்களை வேண்டிய இடத்தில் சரியாக பதிவிடுவதால் அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கிறார் சம்யுக்தா.இந்நிலையில் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட அனிதா, பிக்பாஸ் கொடுத்த பாஸை பெற்றதை அடுத்து அவர் சம்யுக்தாவை நாமினேட் செய்தார்.

samyuktha first post after biggboss goes viral பிக்பாஸ் பிறகு சம்யுக்தா

50 நாட்கள் கடந்த நிலையில் நேற்றைய தினம் பிக் பாஸ் வீட்டில் இருந்து சம்யுக்தா வெளியேறினார். பாலா, ஷிவானி, அர்ச்சனா, ஆஜித் போன்ற பலரும் அவருக்காக கண் கலங்கினர். இந்நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய அவர் தனது முதல் பதிவாக இன்ஸ்ட்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதன்முறையாக தனது வீட்டிற்குள் நுழையும் காட்சியை  வீடியோவாக வெளியிட்டுள்ளார். அவரது குடும்பத்தினர் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்பதையும், பின்பு அவர் தன் மகனை பார்க்கும் நெகிழ்ச்சியான தருணத்தையும் பகிர்ந்து "எனக்கு வீட்டிற்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி" என்பது போல் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆரத்தி எடுத்து வரவேற்ற குடும்பம்... பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சம்யுக்தா வெளிட்ட பதிவு...! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

samyuktha first post after biggboss goes viral பிக்பாஸ் பிறகு சம்யுக்தா

People looking for online information on Biggboss, Samyuktha will find this news story useful.