பிக்பாஸை விட்டு மதுமிதா வெளியேறியதன் பின்னணி என்ன? - ரகசியங்கள் சொல்லும் பிரபல தயாரிப்பாளர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) கமல்ஹாசன் மேடையேறினார். அதற்கு முன் பிக்பாஸிடம் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில், 'டாஸ்கிற்கு பிறகு நடைபெற்ற வாக்குவாதத்தின் காரணமாக மதுமிதா தன்னையே துன்புறுத்திக்கொண்டார். அது பிக்பாஸ் விதிக்கு முரண் என்பதால் அவர் இந்த பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார்' என்று கூறப்பட்டது.

Ravindar Speaks about Kavin, Losliya, Madhumitha, Bigg Boss 3

அதன் பிறகு கமல் அவரை ஆற்றுப்படுத்தி வெளியே அனுப்பி வைத்தார். ஆனால் உண்மையில் மதுமிதாவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து எந்த விளக்கமும் சொல்லப்படவில்லை.  இது பெரிதும் சர்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அதில், 'பிக்பாஸ் வீட்டுக்குள் மதுமிதாவை கடுமையான ஏதோ ஒன்று கடுமையான கோபத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. அதனால் அவர் அப்படி செய்து கொண்டிருக்கலாம்.  அவரை சரவணன் போல யாருக்கும் தெரியாமல் அனுப்பியிருக்கலாம்.

ஆனால் அவரை கையில் கட்டுப் போட்டபடி காண்பித்து பரிதாபத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் என்ன பிரச்சனை என்று கூற மாட்டார்கள். அவர் சேரன், கஸ்தூரி தவிர்த்து யாரிடமும் பேசவே இல்லை.

பசங்க கூட தான் அவங்களுக்கு பிரச்சனை. கஸ்தூரி வேற கொளுத்தி போட்டாங்க. அந்த மூணு பொண்ணுங்களுக்காக தான் நீ பேசற. ஆனா அவங்க யார் பக்கம் இருக்கிறார்கள் என்று பேசினார்.

பிக்பாஸை விட்டு மதுமிதா வெளியேறியதன் பின்னணி என்ன? - ரகசியங்கள் சொல்லும் பிரபல தயாரிப்பாளர் வீடியோ