பிரபல இயக்குனரின் வீட்டிற்குள் நுழைந்த கொரோனா.. இரண்டு பணியாளர்களுக்கு தொற்று உறுதி...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கரண் ஜோஹர் தனது ரசிகர்களுடன் முக்கிய செய்தியை பகிர்ந்துள்ளார். இந்தி சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான கரன் ஜோகர் பல வெற்றி படங்களை இயற்றியுள்ளார். மேலும் தொகுப்பாளராகவும், நடுவராகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இவரது 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சி மிகவும் பிரபலம்.

பிரபல இயக்குனரின் வீட்டிற்குள் நுழைந்த கொரோனாPopular director staff are diagnosed with coorna positive

அவர் கூறும்போது "நான் ஒரு முக்கியமான செய்தியை பகிர விரும்புகிறேன். எனது வீட்டில் இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனது வீட்டின் ஒரு பகுதியில் அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். நானும் எனது குடும்பத்தினரும் உடனடியாக கொரோனா டெஸ்டை மேற்கொண்டதில், எங்களுக்கு தொற்று இல்லை என்று உறுதியாகியுள்ளது.

எனினும் மற்றவர்களின் பாதுகாப்பு கருதி, அடுத்த 14 நாட்களுக்கு எங்களை நாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள போகிறோம். இது மிகவும் கடினமான காலம். வீட்டிலேயே இருந்து சரியான முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் நிச்சயம் கொரோனாவை ஒழிக்க முடியும். அனைவரும் வீட்டிலேயே இருங்கள்" என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிரபல இயக்குனரின் வீட்டிற்குள் நுழைந்த கொரோனாPopular director staff are diagnosed with coorna positive

People looking for online information on Corona, Covi19, Karan Johar will find this news story useful.